அல்லி மருத்துவ பயன்கள் - ஔசதம் - OWSHADHAM -->

Saturday, August 1, 2015

அல்லி மருத்துவ பயன்கள்

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி. மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெள்ளைநிற மலர்களையுடையது வெள்ளையல்லி யெனவும் செந்திற மலர்களையுடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும் நீல

மலர்களையுடையது கரு நெய்தல் (நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெறும். தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்கின்றன. இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பகற்றும், குருதிக் கசிவைத் தடுக்கும்.

1. இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.

2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வாலையில் வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம் சீழ்வருதல், சிறுநீர்ப்பாதைப்புண் சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.
3. அல்லிக் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். கருவுற்றிருக்கும்போது மாதவிலக்கு கண்டால் இம்மாவைப் பயன்படுத்தக் குணமாகும்.

4. கருநெய்தல் பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி. ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி. யாகச் சாப்பிட்டு வர மூளைககொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப்பட படப்பைத் தணிக்கும்.

5. குருநெய்தல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சி குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.
  

alli malar alli poo, alli sedi, alli thaamarai, alli maruthuva payangal, alli maruthuva payan, alli kizhngu.